5/4/14

புதுமுகம்

கொட்டிக்கிடக்கும் தமிழ்ப் பதிவுகளென்னும் முத்துக்களின் நடுவே நானும் ஒரு புதிய வலைப்பூவைக் கொணர்ந்து சேர்க்கிறேன் இன்று.
அவாவினால் உந்தப்பட்டு நான் எடுத்திருக்கும் ஒரு முயற்சி.
என் தகுதிகள் பற்றியெல்லாம் நான் சிந்திக்கவில்லை.
நாமும் ஒரு பதிவராக வேண்டும் என்ற ஒரு அவா மட்டுமே.
இயன்ற வரை முயன்று பார்ப்பேன்,நல்ல பதிவுகளாக அளிப்பதற்கு.

இங்கு அரசியல் இருக்காது.
நகைச்சுவைத் துணுக்குகளிருக்காது
பதிவுலக மொழியில் வெறும் மொக்கை இருக்காது.
பின் என்னதான் இருக்கும்.
எனக்கே தெரியவில்லை!
பொறுத்திருந்து பார்க்கலாம்!
உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டி நிற்கும்
குப்பு சுந்தரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக