5/4/14

மன்னனும் அவ்வையும்!

ஒரு நாள் ஒரு மன்னனும் அவ்வையாரும் கடற்கரையில் கடல் அலை காலை நனைக்குமாறு நடந்து கொண்டிருந்தனர்.

மன்னனுக்கு அவ்வையாரை மட்டம தட்ட ஆசை எழுந்தது.

அவரிடம் கேட்டான்”நீர் வந்து காலில் விழலாமா?’ என்று

அவனுக்கு மிகப் பெருமை,அவ்வையை மடக்கி விட்டோம் என.

அவ்வையார் சொன்னார்”நீரே வந்து காலில் விழுந்தால் நான் என்ன செய்ய?” என்று.

மன்னன் வெட்கித் தலை குனிந்தான்.

புலவர்களிடம் விளையாடலாமா?!

1 கருத்து: