10/6/14

கால்பந்து .

குப்பு அந்தப் பள்ளிக்கூடத்தில் உடற் பயிற்சி ஆசிரியராகச் சேர்ந்தான்.

மாணவர்கள் விளையாட்டு நேரத்தில் மைதானத்தில்  விளையாடுவதைப் பார்வையிட்டுக் கொண்டே வந்தான்.

பல மாணவர்கள் பந்தை உதைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஆனால் ஒரு மாணவன் அவர்களுடன் சேராமல் தனியாக நின்று கொண்டு அவர்கள் ஆடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான்,

குப்பு அவனிடம் சென்றான்.

“நீயும் அவர்களுடன் சேர்ந்து கொள்வதுதானே/?” என்றான்

மாணவன் சொன்னான்”நான் இங்குதான் இருக்க வேண்டும்”

”ஏன்”என்றான் குப்பு.

”ஏனென்றால் நான்தான் கோல் கீப்பர்”

ஒரு இளங்காலை நேரத்தில்!



காலை மணி 5.

வீட்டிலிருந்து வெளியே வந்து வீதியில் இறங்குகிறேன்..

இரு புறமும் பார்க்கிறேன்.

தெரு வெறிச்சோடிக் கிடக்கிறது.

தெரு ஓரத்தில் இருக்கும் சோடியம் வேப்பர் விளக்குகள்,ஒளியை உமிழ்ந்து கொண்டிருக் கின்றன.

ஆனால் அந்த முழு ஒளி சாலையின் மீது விழாமல்,இரு புறமும் படர்ந்து வளர்ந்திருக்கும் மரங்கள் தடுத்து நிற்கின்றன.

மரங்களின் இலை,கிளைகளின் ஊடாக வெளிச்சம் அங்கும் இங்குமாக விழுந்து கொண்டிருக் கிறது.

இருளும் ஒளியுமாகச் சாலை.

நடக்கத் தொடங்குகிறேன்.

எதிர் வீட்டு இளைஞன் லாபர்டாரை இழுத்துக்கொண்டு(அவன் இழுக்கிறானா,அது அவனை இழுக்கிறதா!) வருகிறான்.

அது மெல்ல ஓடி ஒரு விளக்குக் கம்பத்தை முகர்ந்து பார்த்து விட்டுக் காலைத் தூக்குகிறது.
உடன் அங்கிருந்து விலகி அருகில் இருக்கும் காரின் சக்கரத்தை முகர்ந்து பார்த்து விட்டுக் காலைத்தூக்குகிறது.

பின் அவனை இழுத்துக் கொண்டு நடக்கத் துவங்குகிறது.

நாயின் காரணமாக அவனுக்கு உடற்பயிற்சி!

ஒரு தெருநாய் வேகமாக ஓடி வீட்டு நாயைப் பார்த்துக் குரைக்கிறது.

பின் ஓட்டத்தைத் தொடர்கிறது(என்ன அவசரமோ!)

தெரு முனையில் இருக்கும் டீக்கடை திறக்கப்பட்டு விட்டது.

சிலநாட்கள் காலையில் சாலைப்பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் அங்கு நின்று டீ குடித்துக் கொண்டிருப்பார்கள்.

இன்று யாரும் இல்லை.

நினைத்துக் கொள்கிறேன்”இங்கு ஒரு நாள் டீ குடிக்க வேண்டும்”

தினமும் நினைப்பதுதானே!

அதோ வேலைக்காரப் பெண் இடுப்பில் எவர்சில்வர் தவலையுடன் வருகிறாள்

பச்சை கேட் வீட்டில் உள்ள அடி பம்பில் தண்ணீர் அடித்து வாசல் பெருக்கித் தெளித்துக் கோலமிடுவது வழக்கம்.

எதிரே உடல் முழுவதும் வெள்ளையாய்ப் போன பெண் வேக நடையில் வருகிறாள் .எப்போதும் போல் அவள் கையில் இருக்கும் செல்போன் சுலோகங்களைப் பாடிக் கொண்டிருக்கிறது.

எங்கே அந்தத் தம்பதி?இந்த நேரத்துக்கு வந்திருக்க வேண்டுமே?என்ன பிரச்சனையோ?

வானம் வெளுக்க ஆரம்பித்து விட்ட்து.

அவ்வளவுதான்.ஒரு சுற்றுப் போய் விட்டு வீட்டு வாசலுக்கு வந்தாகி விட்ட்து.

இன்றைய நடை முடிந்தது!

9/6/14

நீ வராத இரவு!



படுக்கையில் படுத்தபடி உனக்காகக் காத்திருக்கிறேன்.

உன் வருகையை எதிர்நோக்கி விழித்திருக்கிறேன்.

இன்று ஏன் இந்தத் தாமதம்?

என்னைக் காக்க வைக்காமல் தினம் வரும் நீ இன்று ஏன் காலங்கடத்துகிறாய்?.

8/6/14

இன்றைய சிந்தனை!

ஒன்று பழக்கமாகி விட்டால் அதை விடுவது கடினம்.

நமக்கெல்லாம் சிறு வயது முதலே காபிப்பழக்கம் ஏற்பட்டு விடுகிறது;சாகும் வரை தொடர்கிறது.

ஆங்கிலத்தில் பழக்கத்தை விடுவது கடினம் என்பதை அழகாகச் சொல்வார்கள்

habit!
cut off h; a bit remains!
cut off a; bit remains!
cut off b;it remains!

கெட்ட பழக்கங்கள் இரயில் நட்பு போல் அறிமுகமாகின்றன.
அழையா விருந்தினர்கள் போல் உள் நுழைகின்றன.
எசமான் போல் அதிகாரம் செய்யத்துவங்குகின்றன.
ஒரு கொடுங்கோலனாய் மாறி ஆக்கிரமித்து நம்மைக் கொடுமைப்படுத்துகின்றன.
கடைசியில் கூற்றுவனாய் மாறி விடுகின்றன.

எனவே எந்தக் கெடுதியான செயலையும்,ஒரு முறைதானே என வர அனுமதித்தால்,அது நமக்கு அடிமையாக இருக்காது.

நாம் அதன் அடிமையாகி விடுவோம்

இது இந்த வார இறுதிக்கான சிந்தனை!



7/6/14

மயிர் மகாத்மியம்!



”என்னடா? நீ நினைத்தது நடக்கவில்லை போலிருக்கிறதே.வருந்துகிறேன்”என்றேன் நண்பனிடம்.

அவன் அலட்சியமாகப் பதில் சொன்னான்”மயிரே போச்சு”

அந்தப் பதில் என்னை யோசிக்க வைத்த்து.

எவ்வளவு எளிதாகச் சொல்லி விட்டான்.

அது என்ன சாமானியமான விசயமா?

10/4/14

அவ்வையும் பாரதியும்!



அவ்வையார் ஆத்திசூடி எழுதினார்.
பாரதி புதிய ஆத்திசூடி எழுதினார்.
அவ்வையார் ஆறுவது சினம் என்றார்.
பாரதி ரௌத்திரம் பழகு என்றார்.
ஏன்?

8/4/14

எதிரொலி!



சிறந்ததை கொடுத்தால் சிறந்ததே கிடைக்கும்
சிறுவன் ஒருவன் பள்ளத்தாக்குக்கு அருகில் வாழ்ந்து வந்தான். ஏதாவது ஓசை எழுப்பும்போது பள்ளத்தாக்குக்கு எதிர்புறம் இருந்து வரும் எதிரொலியை கேட்டு எதிர்புறம் தன்னைப் போல் ஒரு சிறுவன் இருப்பதாக எண்ணினான். அவன் சொல்வதை எதிரொலியாக திரும்ப கேட்டு தனக்கு ஒரு நண்பன் இருப்பதாக நினைத்தான். ஒரு முறை கோபத்தில் ‘’நான் உன்னை வெறுக்கிறேன்’’ என்று கூற எதிரொலியாக அதையே கேட்டான். உடனே மனம் வருந்தி தன தாயிடம் வந்து கூறினான். தாய் அவனை சமாதானப்படுத்தி உன் கோபத்தை விட்டுவிட்டு அன்புடன் ‘’உன்னை விரும்புகிறேன்’’ என்று கூறு என்று அறிவுறுத்தினாள். சிறுவனும் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு பள்ளத்தாக்குக்கு சென்று ‘’நான் உன்னை விரும்புகிறேன்’’ என்று சொல்ல உடனே எதிரொலியாக அதையே திரும்ப கேட்டதும் நண்பன் கிடைத்து விட்டான் என்று மகிழ்ந்து போனான்.

ஒருவனின் மனமும் அந்த பள்ளத்தாக்கு போன்றதே. ஒருவன் என்ன நினைக் கிறானோ அதுவே திரும்ப திரும்ப எழும்பி மனதில் ஆழமான எண்ணப்பதிவை உண்டாக்கும். ஆகவே எப்பொழுதும் தூய எண்ணத்தையே மனதில் கொள்ளவேண்டும். இறைவனை நினைப்பதை தவிர தூய்மையான எண்ணம் வேறு ஒன்று இருக்க முடியுமா? நாள் முழுவதும் இறைவனை நினைப்பதற்கு சுலபமான வழி அவன் நாமத்தை ஜபம் செய்வதே ஆகும்.

5/4/14

மன்னனும் அவ்வையும்!

ஒரு நாள் ஒரு மன்னனும் அவ்வையாரும் கடற்கரையில் கடல் அலை காலை நனைக்குமாறு நடந்து கொண்டிருந்தனர்.

மன்னனுக்கு அவ்வையாரை மட்டம தட்ட ஆசை எழுந்தது.

அவரிடம் கேட்டான்”நீர் வந்து காலில் விழலாமா?’ என்று

அவனுக்கு மிகப் பெருமை,அவ்வையை மடக்கி விட்டோம் என.

அவ்வையார் சொன்னார்”நீரே வந்து காலில் விழுந்தால் நான் என்ன செய்ய?” என்று.

மன்னன் வெட்கித் தலை குனிந்தான்.

புலவர்களிடம் விளையாடலாமா?!

புதுமுகம்

கொட்டிக்கிடக்கும் தமிழ்ப் பதிவுகளென்னும் முத்துக்களின் நடுவே நானும் ஒரு புதிய வலைப்பூவைக் கொணர்ந்து சேர்க்கிறேன் இன்று.
அவாவினால் உந்தப்பட்டு நான் எடுத்திருக்கும் ஒரு முயற்சி.
என் தகுதிகள் பற்றியெல்லாம் நான் சிந்திக்கவில்லை.
நாமும் ஒரு பதிவராக வேண்டும் என்ற ஒரு அவா மட்டுமே.
இயன்ற வரை முயன்று பார்ப்பேன்,நல்ல பதிவுகளாக அளிப்பதற்கு.

இங்கு அரசியல் இருக்காது.
நகைச்சுவைத் துணுக்குகளிருக்காது
பதிவுலக மொழியில் வெறும் மொக்கை இருக்காது.
பின் என்னதான் இருக்கும்.
எனக்கே தெரியவில்லை!
பொறுத்திருந்து பார்க்கலாம்!
உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டி நிற்கும்
குப்பு சுந்தரம்